செய்திகள்
தேவதானப்பட்டி அருகே கோவிலில் நகை திருட்டு
தேவதானப்பட்டி அருகே கோவிலில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலத்தில் அழகர்நாயக்கன்பட்டி செல்லும் சாலையில் ஆகாசகாளை கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக சுப்புராமன் (வயது 61) என்பவர் உள்ளார். இவர் கடந்த 17-ந்தேதி மாலை கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் மாலை கோவிலுக்கு திரும்பி வந்தார். அப்போது கோவிலின் வெளிப்புற பூட்டு மற்றும் உட்புற கதவின் பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலில் அரசி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த அரைப்பவுன் தாலி, 4 குத்துவிளக் குகள், 2 பொங்கல் பானைகள் ஆகியவை மர்மநபர்களால் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.