ஆன்மிகம்
ஆண்டாள்

மகிழ்ச்சியான மணவாழ்விற்கு பாவை நோன்பு

Published On 2019-12-17 05:59 GMT   |   Update On 2019-12-17 05:59 GMT
திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
ஆயர்பாடியில் உள்ள கோபியர்கள், மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி, மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதம் என்பதால், இந்த விரதம் ‘பாவை நோன்பு’ என்று வழங்கப்படலாயிற்று. ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே, அரங்கனை கணவனாக அடைந்தாள்.

ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மை இடாமல், தலையில் மலர் சூடாமல் புற அழகில் நாட்டம் செலுத்தாமல், இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவை நோன்பினை மேற்கொண்டாள்.

எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க, மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.

திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
Tags:    

Similar News