செய்திகள்
மாயம்

காலாப்பட்டில் மருமகளுடன் தகராறில் மாமியார் மாயம்

Published On 2020-09-14 10:19 GMT   |   Update On 2020-09-14 10:19 GMT
காலாப்பட்டில் மருமகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வாட்ஸ் அப்பில் பதிவு செய்து விட்டு பெண் மாயமானார்.

சேதராப்பட்டு:

புதுவை பெரியகாலாப் பட்டு பாரதியார்நகர் 2-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சசிகலா (வயது41). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு சசிகலாவின் இளையமகன் காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கும் சசிகலாவுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு இருந்து வந்தது.

சம்பவத்தன்றும் இதுபோல இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சசிகலா அதேபகுதியில் உள்ள தனது மகள் வீட்டு சென்று அங்கு தனது மகளிடம் மருமகள் குறித்து குறி வருத்தப்பட்டார்.

பின்னர் தனது மகளிடம் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். ஆனால், சசிகலா வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் சசிகலா எங்கும் இல்லை.

அதேவேளையில் தனது மகள் செல்போனில் வாழவிரும்பவில்லை என்று சசிகலா வாட்ஸ்அப்பில் பதிவு செய்து இருந்தார்.

இதையடுத்து சசிகலாவின் மகன் குணசீலன் தனது தாய் மாயமானது குறித்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News