ஆன்மிகம்
கடலூர் கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா
கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன்கோவில் தெருவில் கோதண்டராமர் கோவிலில் ராமர், சீத்தா, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது.
கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன்கோவில் தெருவில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இங்கு 99-வது ஆண்டு ஸ்ரீராமநவமி விழா நேற்று நடந்தது. இதையொட்டி ராமருக்கு பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ராமர், சீத்தா, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வழக்கமாக இந்த சன்னதியில் ராமநவமி விழா 7 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக நேற்று ஒரு நாள் மட்டும் விழா எளிமையாக நடந்தது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வழக்கமாக இந்த சன்னதியில் ராமநவமி விழா 7 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக நேற்று ஒரு நாள் மட்டும் விழா எளிமையாக நடந்தது.