செய்திகள்
உத்தரகாண்டுக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்தார்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் அக்டோபர் 18-ம் தேதி (இன்று) கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோல், இன்று முதல் வருகிற 19ந்தேதி வரை ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மையம், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்...ராகுல்காந்தி முன்கூட்டியே காங்கிரஸ் தலைவர் ஆகிறார்