செய்திகள்
கைது

திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2021-02-20 15:53 GMT   |   Update On 2021-02-20 15:53 GMT
திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பூண்டி மகிமைபுரம் கிறிஸ்தவ தெருவைச்சேர்ந்தவர் சித்ரா (வயது 45). இவர் மோட்டார் சைக்கிளில் பூண்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார். திருமண மண்டப வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திருமணத்திற்கு சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிளை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சித்ரா திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் தஞ்சை கீழவாசல் சாலைகார தெருவை சேர்ந்த ரவி (27) என்பதும், மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News