வழிபாடு
சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்

சித்திரை திருவிழா: சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்

Published On 2022-04-12 04:05 GMT   |   Update On 2022-04-12 04:05 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 2-ம் நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்ற போதிலும் அதில் சித்திரை பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவானது வருகிற 22-ந்தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதேபோல் தொடர்ந்து தினமும் காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்து இரவு 8 மணிக்கு ஒவ்வொரு நாளும் தினம் ஒரு வாகனமாக அதாவது பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேச வாகனம், மரக்குதிரை வாகனம், வெள்ளிகுதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடாகி வீதிஉலா கண்டருளுகிறார்.

இப்படி 9 நாட்கள் முடிந்து 10 ஆம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
Tags:    

Similar News