செய்திகள்
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்

மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை- கலெக்டர் அருண் உத்தரவு

Published On 2020-11-07 04:50 GMT   |   Update On 2020-11-07 04:50 GMT
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம்களை நடத்த கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்தாலும் தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் மக்கள் கூட்டம் கடை வீதிகளில் அலைமோதி வருகிறது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

இதைத்தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், வணிக நிறுவன பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம்களை நடத்த கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News