ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்

நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்

Published On 2020-11-04 02:36 GMT   |   Update On 2020-11-04 02:36 GMT
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு மஞ்சள் பட்டு புடவை உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் கடந்த 31-ந் தேதி ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது.

விழாவின் 4-ம் நாளான நேற்று அம்பாளுக்கு மஞ்சள் பட்டு புடவை உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
Tags:    

Similar News