செய்திகள்
கைது

கோவையில் அழகு நிலையத்தில் விபசாரம் புரோக்கர் கைது - 3 அழகிகள் மீட்பு

Published On 2021-10-30 11:03 GMT   |   Update On 2021-10-30 11:03 GMT
கோவையில் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கரை கைது செய்த போலீசார் 3 அழகிகளை மீட்டனர்.

கோவை:

கோவை ரத்தினபுரி அருகே உள்ள டாக்டர் காலனியில் அழகு நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்த அழகு நிலையத்தில் பெண்களை வைத்து விபசார தொழில் நடப்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து தகவல் வந்த அழகு நிலையத்துக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். இதில் அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ராஜூவராஜ் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அழகு நிலையத்தில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த கேரள அழகி உள்பட 3 அழகிகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட புரோக்கர் ராஜூவராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News