செய்திகள்
கோப்புபடம்

நெய்வேலி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-11-20 07:27 GMT   |   Update On 2020-11-20 07:27 GMT
நெய்வேலி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பெரியசாமி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். நெய்வேலியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மகன் பிரிஜேஷ் (வயது 13). நெய்வேலி இந்திரா நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். 

நேற்று வீட்டில் இருந்த பிரிஜேஷ் கம்ப்யூட்டரில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்தபகுதியில் இடி-மின்னல் சத்தம் கேட்டது. இதைகேட்ட அவனது தாய் சுகுணா இடி-மின்னல் ஏற்படும்போது கம்யூட்டரை அணைக்குமாறு கூறி, மகனை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரிஜேஷ் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News