செய்திகள்
உடுமலை பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

உடுமலை பள்ளியில் சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை

Published On 2021-09-21 07:45 GMT   |   Update On 2021-09-21 07:45 GMT
பள்ளி தலைமையாசிரியர் கணபதி மற்றும் பள்ளி மேலாண்மை கமிட்டி தலைவி சாகிதா பானு ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
உடுமலை:

உடுமலை நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு யு.கே.சி. நகரில் அமைந்துள்ள துவக்க பள்ளியின் சுற்று சுவர் இடிந்து விழுந்து 6 மாதங்கள் ஆகிறது. இதனால் மாலை நேரங்களில் குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு புகலிடமாக உள்ளது. 

இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் கணபதி மற்றும் பள்ளி மேலாண்மை கமிட்டி தலைவி சாகிதா பானு ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். மேலும் உடுமலை நகராட்சி மற்றும் பள்ளி கல்விதுறை விரைவாக நடவடிக்கை எடுத்து சுற்றுசுவர் அமைத்து பாதுகாப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News