செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டபொதுமக்கள்.

மின் இணைப்பு கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம்

Published On 2021-11-22 10:24 GMT   |   Update On 2021-11-22 10:24 GMT
மின் இணைப்பு வசதி கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் பெருந்தொழுவு அங்காளம்மன் நகர் பகுதி பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். மனுவில், மின்இணைப்பு வசதி கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தோம். 

ஆனால் மின்கம்பங்கள் அமைப்பதற்கான இடம் தொடர்பான பிரச்சினையால் மின் இணைப்பு வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் மின்வசதியின்றி தவித்து வருகிறாம். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் கலெக்டர் அலுவலக வளாக சாலையில் திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். 
Tags:    

Similar News