உள்ளூர் செய்திகள்
வேலூர் பாகாயம் பெண் இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர்:
வேலூர் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா (வயது40) இவருக்கு கடந்த சில நாட்களாக சளி இருமல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாதிக்கப்பட்டதால் பாகாயம் போலீஸ் நிலையம் முழுவதும் இன்று காலை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் போலீஸ் நிலையம் மூடப் பட்டது. அங்கு பணிபுரிந்து வரும் சப்&இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அனைவருக்கும் இன்று காலை கொரோனா சோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன.
போலீஸ் நிலையத்திற்கு வெளியே பந்தல் அமைத்து போலீசார் பொதுமக்களிடம் புகார் மனுக்களை வாங்கினர்.