செய்திகள்
புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்- பெரியகருப்பன் எம்.எல்.ஏ. பேட்டி

Published On 2020-09-24 11:36 GMT   |   Update On 2020-09-24 11:36 GMT
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. கூறினார்.
காரைக்குடி:

காரைக்குடியில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தென்னவன் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழர்களின் உரிமையை மீட்கும் இயக்கமாகவும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் இயக்கமாகவும் தி.மு.க. இருந்து வருகிறது. பல்வேறு போராட்டங்களையும், சோதனைகளையும் கடந்து வந்தது தான் தி.மு.க. தற்போது தி.மு.கவிற்கு பலம் சேர்க்கும் வகையில் எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் ஆன்லைன் மூலம் 18 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ஆனாலும் அதற்கு மேலும் உறுப்பினர்கள் இணைவார்கள்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு இருந்தாலும் சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை 4 தொகுதிகளையும் சேர்த்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மாவட்டம் முழுவதும் அந்தந்த தொகுதி பொறுப்பாளர்கள் திறமையாக செய்து வருகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Tags:    

Similar News