ஆன்மிகம்
பெருமாள்

ஆரணியில் பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத பிறப்பு விழா

Published On 2021-09-18 07:44 GMT   |   Update On 2021-09-18 07:44 GMT
கொரோனா தொற்று பரவலால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரணி சார்ப்பனார்பேட்டை வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கொரோனா தொற்று பரவலால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அனுமதியின்றி அனைத்து சிறப்பு பூஜைகளும் ஏகாந்தமாக நடத்தப்பட்டது. பட்டாச்சாரியார்கள் மட்டுமே பூஜையில் பங்கேற்றனர்.

அதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலமேலுமங்கை சமேத சீனிவாசப்பெருமாள் கோவிலிலும், கோதண்டராமர் கோவிலிலும் சிறப்புப்பூஜைகள் நடந்தது.
Tags:    

Similar News