செய்திகள்
கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை - கவர்னர் தமிழிசை தகவல்
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை கவர்னர் தமிழிசை தகவல்
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. புதுவையில் கொரோனா பாதிப்பு அபாய கட்டத்தில் இல்லை.
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதுவையில் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னர் தமிழிசை இன்று புதுவை முருங்கம்பாக்கம் கைவினை நகருக்கு சென்று அங்கு கைவினை பொருட்கள் செய்வதை பார்வையிட்டார்.