செய்திகள்
அதிமுக தலைமை அலுவலகம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்- நாளை முதல் விருப்ப மனுக்களை பெறுகிறது அதிமுக

Published On 2019-09-21 08:26 GMT   |   Update On 2019-09-21 09:50 GMT
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்களை வழங்கலாம்.
சென்னை:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 21-10-2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள்,

தலைமைக் கழகத்தில் 22-9-2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும், 23-9-2019 (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் விண்ணப்ப கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அப்படிவங்களை 23-9-2019 அன்று பிற்பகல் 3 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் தலைமைக் கழகத்தில் 23-9-2019 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. விருப்பமனு அளித்த அனைவரும் இந்த நேர்காணலில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News