உள்ளூர் செய்திகள்
நிரம்பி வழியும் பூவாநல்லூர் தடுப்பணை.

நிரம்பி வழியும் பூவாநல்லூர் தடுப்பணை - பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2021-12-03 07:32 GMT   |   Update On 2021-12-03 07:32 GMT
காங்கயம் தாலுகா வெள்ளக்கோவில்-தாசவநாயக்கன்பட்டியில் உள்ள வட்டமலை அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காங்கயம்:

காங்கயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பூவாநல்லூர்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதையடுத்து வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பூவாநல்லூரில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டு ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 3 மீட்டர்உயரம், 50 மீட்டர் அகலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது.

தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து காங்கயம் தாலுகா வெள்ளக்கோவில்-தாசவநாயக்கன்பட்டியில் உள்ள வட்டமலை அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக காங்கயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சியில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பாக கட்டப்பட்ட பூவாநல்லூர் தடுப்பணை நிரம்பி அணைக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. 

இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News