உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் மாநில பொதுச செயலாளா சீனிவாசன் பேசிய காட்சி.

நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட இளையராஜாவிற்கு தகுதி உள்ளது

Published On 2022-04-16 10:16 GMT   |   Update On 2022-04-16 10:16 GMT
நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட இளையராஜாவிற்கு தகுதி உள்ளது என்று பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
திருச்சி:

பா.ஜ.க. வர்த்தக அணி, அமைப்பு சாரா தொழிலாளர் நல பிரிவு சார்பில் இன்று தெருவோர வியாபாரிகள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் ஓய்வூ தியம் மற்றும் தொழில்கடன் விளக்கக் கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. 

மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.  வர்த்தக அணி செயலாளர் எம்.பி. முரளிதரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வையாளர்கள் இல கண்ணன், லோகிதாஸ், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் தினகர், அமைப்புசாரா பிரிவு மாவட்ட நிர்வாகி பாரதி, வர்த்தக அணி மாவட்ட துணை தலைவர் சுவேந்திரன், மற்றும் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் பேசினார் அப்போது அவர் கூறியதாவது;-
தமிழக இளைஞர்களிடம் தேசியமும் ,ஆன்மீகமும் நிரம்ப இருக்கின்றது. அதனை உணரும் காலம் விரைவில் வரும். 

ஒரே இரவில் கூட தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும். மாற்றுக் கட்சியினர் நமது எதிரிகள் கிடையாது. அவர்க ளெல்லாம் நாளைய பாஜகவினர் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். வன்முறை நமக்கு பலன் சேர்க்காது. அம்பேத்கர் வழியில் இன்றைக்கு பிரதமர் மோடி செயல்படுவதாக இசைஞானி இளையராஜா பாராட்டியுள் ளார். அடித்தட்டில் இருந்து வந்த அவருக்கு மோடியை பாராட்டும் முழு தகுதி இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.

மண்டல் தலைவர்கள் மல்லி செல்வராஜ், சதீஷ்குமார் நிர்வாகிகள் ஸ்ரீராம் பங்கேற்றனர்.
Tags:    

Similar News