செய்திகள்
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்கள்- காங்கிரஸ் எம்பி கடிதம்
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டும்படி மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்பி கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி புதிய சட்டங்களை நீக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். விவசாய சங்க நிர்வாகிகளுடன் இன்று மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது
இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், விவசாயிகள் போராட்டம், கொரோனா தடுப்பூசியின் நிலை, பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறி உள்ளார்.