செய்திகள்
சீரான குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
அத்திகடவு குடிநீர் மாதம் ஒரு முறை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு சந்தைபேட்டை பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்காததால் அத்திகடவு குடிநீர் வசதி கேட்டு பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகதின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:& குடிநீர் வசதி கேட்டு தொங்குட்டிபாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
எங்கள் பகுதிக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் உப்பு தண்ணீர் மட்டுமே வருகிறது. அத்திகடவு குடிநீர் மாதம் ஒரு முறை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. அத்திகடவு குடிநீர் விநியோகத்தை முறையாக சீரமைத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.