செய்திகள்
கைது

தஞ்சை அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

Published On 2021-08-31 09:28 GMT   |   Update On 2021-08-31 09:28 GMT
தஞ்சை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வல்லம்:

தஞ்சை அருகே உள்ள சென்னம்மட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 26). இவர் அருகே உள்ள காட்டு பகுதியில் தனியாக ஆடு மேய்த்து கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளார். இதனால் அப்பெண் அலறி உள்ளார்.

அவருடைய சத்தம் கேட்டு அங்கு அப்பெண்ணின் தந்தை வந்துள்ளார். இதனை பார்த்த கோவிந்தராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மேலும் பாலியல் பலாத்காரம் முற்சியின் போது அந்த பெண்ணுக்கு உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நேற்றிரவு தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் தீவிர விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News