விளையாட்டு
பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி

ஐபிஎல் 2022: பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 209 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்

Published On 2022-05-13 16:13 GMT   |   Update On 2022-05-13 16:13 GMT
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக லிவிங்க்ஸ்டன் 42 பந்துகளில் நான்கு 6, 5 பவுண்டரிகள் விளாசி 70 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோ 66 ரன்கள், தவான் 21 ரன்கள், மயங்க் அகர்வால் 19 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 9 ரன்கள், பிரார் மற்றும் ரிஷிஷ் தவான் தலா 7 ரன்கள், ராகுல் சஹார் 2 ரன்கள் மற்றும் பனுக்கா ராஜபக்சே ஒரு ரன்னும் எடுத்தனர்.

பெங்களூரு அணி தரப்பில் அபாரமாக விளையாடிய ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.வநிந்து ஹசாரங்கா 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல் மற்றும் ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள்.. ஐபிஎல் 2022 - தான் வெளியேறிய கையோடு சென்னையையும் வெளியேற்றியது மும்பை
Tags:    

Similar News