செய்திகள்
தாயார் செலவுக்கு பணம் தராததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போளூர்:
போளூர் ரெயில்வே கிராஸ் ரோடு பகுதியில் வசிப்பவர் சந்திரா, கூலித்தொழிலாளி. இவரின் மகன் விக்டர் ரோசாரியோ (வயது 21). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் தாயாரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர், தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த ரோசாரியோ வீட்டின் அறைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாயார் சந்திரா போளூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.