உள்ளூர் செய்திகள்
மேளதாளம் முழங்க ராஜேந்திரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

கொரோனாவில் இருந்து மீண்ட சிறை அதிகாரியை மேளதாளத்துடன் வரவேற்ற உறவினர்கள்

Published On 2022-01-21 08:14 GMT   |   Update On 2022-01-21 08:14 GMT
கொரோனாவில் இருந்து மீண்ட சிறை அதிகாரியை மேளதாளத்துடன் பூக்கள் தூவி அவரது குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.
புதுச்சேரி:

புதுவை ரெயின்போ நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 76). ஓய்வு பெற்ற சிறை அதிகாரியான இவர் வக்கீலாகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை குடும்பத்தினர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ராஜேந்திரன் குணம் அடைந்தார்.

அவரை குடும்பத்தினர் மேளதாளத்துடன் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவரை குடும்பத்தினர் பேனர் வைத்தும் பூக்கள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



Tags:    

Similar News