வழிபாடு
சடாரி

ஸ்ரீசடாரியின் மகிமை

Published On 2021-12-23 08:20 GMT   |   Update On 2021-12-23 08:20 GMT
விஷ்ணு ஆலயங்களுக்கு செல்லும் ஒவ்வொருவரும் எல்லா சன்னதிகளிலும் ஸ்ரீசடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான் அந்தந்த சன்னதிகளில் வழிபாடு பூர்த்தியானதாக கருதுவர்.
வைணவ ஆலயங்களில் எம்பெருமான் திருவடிக்கு முன்பாக இருக்கும் பாதுகைகள் கொண்ட திருவடி ‘மகுடம்’ சடாரி எனப்படுகிறது.

அஞ்ஞானத்துக்குப் பகையாக இருப்பது சடாரி ஆகும். இதில் பெருமாளின் பாதம் பதிக்கப்பட்டிருக்கும். பெருமாளைச் சரணடைந்தவர்கள் அஞ்ஞானம் நீங்கப் பெறுவர்.

விஷ்ணு ஆலயங்களுக்கு செல்லும் ஒவ்வொருவரும் எல்லா சன்னதிகளிலும் தீர்த்தம், துளசி, மஞ்சள்காப்பு, குங்குமம் முதலிய பிரசாதங்களைப் பெற்று கொள்வதுடன் ஸ்ரீசடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான் அந்தந்த சன்னதிகளில் வழிபாடு பூர்த்தியானதாக கருதுவர்.

கோவில்களுக்குச் செல்லும்போது அனைத்துச் சந்நதிகளிலும் சடாரி பெற்றுக்கொண்டு நம்மை புனிதப்படுத்திக் கொள்வது நமக்கு நல்ல கதியை அளிக்கும்.
Tags:    

Similar News