செய்திகள்
கைது

படப்பை அருகே பணம்-நகை பறித்த 3 பேர் கைது

Published On 2019-11-07 11:42 GMT   |   Update On 2019-11-07 11:42 GMT
படப்பை அருகே பணம் மற்றும் நகை பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 தங்கச் சங்கிலி, 2 செல்போன், ரூ.15,000 ரொக்கப்பணம். ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
படப்பை:

படப்பை அடுத்த மககன்யம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா. தனியார் கம்பெனி ஊழியர்.

இவர் கடந்த மாதம் 8-ந்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். மககன்யம் கூட்டு சாலையில் வந்தபோது 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி மீனா அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, அவரிடம் இருந்த செல்போன், ரூ.700 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதுபோல், தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்க்கும் பிரகாஷ் என்பவரை கடந்த மாதம் 28-ந்தேதி 3 பேர் கடத்திச் சென்றனர். அவரிடம் இருந்து ரு.1,000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இந்த சம்பவங்கள் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மேலாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (29), அஜித் (21), மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 தங்கச் சங்கிலி, 2 செல்போன், ரூ.15,000 ரொக்கப்பணம். ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News