செய்திகள்
கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது

Published On 2021-01-09 11:25 GMT   |   Update On 2021-01-09 11:25 GMT
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழ்வேளூர் அருகே புதுச்சேரி வடக்கு தெருவில் சாராயம் விற்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் புதுச்சேரி வடக்கு தெருவை சேர்ந்த தங்கையன் மனைவி மீனா(வயது45) என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாவை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதை போல கோவில் கடம்பனூர் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற நாகை நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மனைவி தேடாசெல்வம்(63), சங்கமங்கலம் சுடுகாடு அருகே சாராயம் விற்ற குற்றம்பொருத்தானிருப்பு பகுதியை சேர்ந்த சரவணன் (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News