செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போலீஸ் அதிகாரி

மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தாருங்கள்: மத்திய அரசுக்கு மம்தா வேண்டுகோள்

Published On 2021-01-16 12:14 GMT   |   Update On 2021-01-16 12:14 GMT
மேற்கு வங்காளத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 3,006 மையங்கள் மூலமாக முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது.

மேற்கு வங்காள மாநிலத்திலும் முன்கள பணியாளர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘முன்கள பணியாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு வங்காள மாநில மக்களுக்கும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.

மாநில அரசு பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என நினைக்கிறது. தேவைப்பட்டால் அதற்கான நிதிச்சுமையை தாங்க மேற்கு வங்காள அரசு தயாராக இருக்கிறது’’ என்றார்.
Tags:    

Similar News