செய்திகள்
பெண்கள் மனரீதியாக பலம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் - நீதிபதி அறிவுரை
பெண்களை தங்களை காத்துகொள்வதோடு பிறருக்கும் உதவும் வகையில் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்று நீதிபதி பேசினார்.
திருப்பூர்:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு திருப்பூர் மரியாலயா காப்பகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சுகந்தி தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
பெண்கள் மனரீதியாக பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும். அதற்காக உரிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்றால் அது குறித்து முன்னரே கண்டறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் உடல்ரீதியாகவும் தங்களை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும். தங்களைக் காத்துக் கொள்வதோடு பிறருக்கும் உதவும் வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.