செய்திகள்
கைது

வேதாரண்யத்தில் எரிசாராயம் கடத்தியவர் கைது

Published On 2021-06-09 10:29 GMT   |   Update On 2021-06-09 10:29 GMT
வேதாரண்யத்தில் எரிசாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர் மற்றும் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் பால்ராஜ் வேதாரண்யம், நகரில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது செங்காதலை சாலையில் ஒரு மாட்டுக் கொட்டகையில் ஸ்கூட்டரில் எரிசாராயம் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்து ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். சாராயம் கடத்தி வந்த வீரவிநாயகம் (வயது 44) என்பவரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News