செய்திகள்
கோப்புபடம்

தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Published On 2020-10-30 13:01 GMT   |   Update On 2020-10-30 13:01 GMT
தூத்துக்குடியில் புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூபாலராயர்புரம் மீன்மார்க்கெட் பகுதியில், தூத்துக்குடி திரவியபுரத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 41) என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்து 14 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News