செய்திகள்
மொரப்பூர் அருகே மது விற்ற 2 பேர் கைது
மொரப்பூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள ராணிமூக்கனூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு வீட்டில் பதுக்கி வைத்து மது விற்று கொண்டு இருந்த முரளி (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று கம்பைநல்லூரில் பெட்டிக்கடையில் மது பதுக்கி வைத்ததாகவும், மது குடிக்க அனுமதித்ததாகவும் பரமானந்தம் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.