உள்ளூர் செய்திகள்
சிறுபான்மை மாணவர்கள் கல்வித்தொகை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
திருப்பூர்:
சிறுபான்மை மாணவர்கள் கல்வித்தொகை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11-ம் வகுப்பு முதல் பி.எச்.டி., படிப்பு வரை படிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.