செய்திகள்
செக்கானூரணி பகுதியில் 5-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
செக்கானூரணி பகுதியில் 5-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மதுரை:
செக்கானூரணி துணை மின் நிலையத்தில் வருகிற 5-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்தூர், சாக்கலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஆதிலட்சுமி தெரிவித்துள்ளார்.