செய்திகள்
தொண்டி பகுதியில் அரசே காய்கறிகளை விநியோகம் செய்ய கோரிக்கை
ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியானது முதல் நிலை பேரூராட்சி ஆகும். தற்போது அரசு அறிவித்த ஊரடங்கால் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த பகுதியில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களே அதிகம் உள்ளனர்.
இதனால் ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சிரமத்தில் உள்ளனர். ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
நகர்புறங்களில் பொது மக்களுக்கு கிடைப்பது போல, கிராமப்பகுதியிலும் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் அரசு நிர்ணயம் செய்த விலைக்கே கிடைக்க அரசு தோட்டக்கலை துறை மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தக சங்க தலைவர் சாதிக் கோரிக்கை விடுத்தார்.