செய்திகள்
பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

வெள்ளகோவிலில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-09-30 10:22 GMT   |   Update On 2021-09-30 10:22 GMT
வெள்ளகோவில் அம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அம்மன் கோவில் வீதியில் ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது வெள்ளகோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதையடுத்து வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி உத்தரவின்பேரில் டாக்டர் கவுதம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கதிரவன் மற்றும் செவிலியர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள வீட்டில் இருந்தவர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 

மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  
Tags:    

Similar News