செய்திகள்
கோப்புப்படம்

கோவையில் இன்று காலை ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

Published On 2019-11-07 10:52 GMT   |   Update On 2019-11-07 10:52 GMT
கோவையில் இன்று காலை ரெயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை ரத்னபுரியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 45) எலக்ட்ரீசியன். இவர் இன்று காலை வடகோவை- பீளமேடு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராத விதமாக சண்முகம் மீது மோதியது. இதில் அவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News