செய்திகள்
மணல்

உ.பி: சட்டவிரோதமாக மணல் அள்ளிய 20 பேர் கைது, 150 லாரிகள் பறிமுதல்

Published On 2019-11-28 06:52 GMT   |   Update On 2019-11-28 06:52 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக லாரிகளில் மணல் ஏற்றி வந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அள்ளுவதை தடுக்க காவல்துறை, சுரங்கத் துறை மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் சமீபத்தில் பாண்டா மாவட்டத்தில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு 20 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த திங்கள் கிழமை அதிக சுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் சாலையில் வந்த பேருந்தும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானாதில் 9 பேர் பலியாகினர். இதையடுத்து இந்த கூட்டுப் பயிற்சி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று இரவு நடத்தப்பட்ட இந்த சோதனையில் அதிக சுமை ஏற்றிக்கொண்டு வந்த 150 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’, என தெரிவித்தனர்.

Tags:    

Similar News