செய்திகள்
கோப்புபடம்

குளித்தலையில் மணல் கடத்தியவர் கைது: 2 பேர் தப்பி ஓட்டம் - 3 வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-02-22 10:07 GMT   |   Update On 2021-02-22 10:07 GMT
குளித்தலையில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள நடுவதியம் பகுதியில் குளித்தலை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளி அதனை சாக்கு பைகளில் நிரப்பி 2 மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 3 பேர், அதனை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது 2 பேர் தப்பி ஓடி விட்டனர். சரக்கு ஆட்டோ உரிமையாளர் குளித்தலை அருகே உள்ள கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

3 வாகனங்கள் பறிமுதல்

பின்னர், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள், சரக்கு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News