செய்திகள்
ஒசானே தாமஸ், எவின் லீவிஸ்

பென் ஸ்டோக்ஸ், பட்லருக்கு பதிலாக 2 புதிய வீரர்கள் தேர்வு: ராஜஸ்தான் அணி அறிவிப்பு

Published On 2021-09-01 09:59 GMT   |   Update On 2021-09-01 09:59 GMT
ஐ.பி.எல். போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லருக்கு பதிலாக இரண்டு புதிய வீரர்களை ராஜஸ்தான் அணி தேர்வு செய்துள்ளது.
செப்டம்பர் 19-ம்தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். 2021 தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெற உள்ளன. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். போட்டியில் இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், பட்லர் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பட்லருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதாலும், பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிற்கு இடைவெளி விட்டுள்ளதாலும் இந்த ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எவின் லீவிஸ், ஒஷானே தாமஸ் ஆகியோரை ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

முன்னதாக, மும்பை அணியில் லீவிஸ் விளையாடியுள்ளார். தாமஸ் ராஜஸ்தான் அணியில் விளையாடியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News