செய்திகள்
ஊரடங்கு விதிகளை மீறிய 7 பேர் மீது வழக்குப்பதிவு
ஊரடங்கை மீறி முககவசம் அணியாமலும், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அன்னவாசல்:
இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி முககவசம் அணியாமலும், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.