ஆன்மிகம்
இடையார்பாளையம் நாணமேடு சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
இடையார் பாளையம் நாணமேட்டில் உள்ள சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) மங்களாஷ்டமியை முன்னிட்டு மாலை 4 மணி அளவில் யாக பூஜை நடக்கிறது.
அஷ்டமி என்பது எட்டாவது திதி நாளாகும். இன்று தேய்பிறை அஷ்டமி. புதுவை- கடலூர் சாலையில் உள்ள இடையார் பாளையம் நாணமேட்டில் உள்ள சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) மங்களாஷ்டமியை முன்னிட்டு மாலை 4 மணி அளவில் யாக பூஜை நடக்கிறது.
தொடர்ந்து சாமிக்கு விசேஷ அபிஷேக, அலங்கார, ஆராதனைகளுடன் வழிபாடு நடக்கிறது. அரசு அறிவுறுத்தலின்படி பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து சாமிக்கு விசேஷ அபிஷேக, அலங்கார, ஆராதனைகளுடன் வழிபாடு நடக்கிறது. அரசு அறிவுறுத்தலின்படி பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.