உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

பல்லடத்தில் வக்கீலை தாக்கிய 2 பேர் கைது

Published On 2021-12-04 08:29 GMT   |   Update On 2021-12-04 08:29 GMT
ஆவேசமடைந்த 2 இளைஞர்கள் வழக்கறிஞர் பாலமுருகனை கைகளால் சரமாரியாக தாக்கினர்.இதில் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பல்லடம்:

கோவையை சேர்ந்த வக்கீல் பாலமுருகன் (வயது 35). இவர் பல்லடத்தில் பேருந்து நிலையம் முன்பு உள்ள தனியார் பேக்கரி முன்பு அவரது காரை நிறுத்திவிட்டு தேனீர் குடித்து விட்டு வந்து காரை எடுக்க முற்பட்டார். 

அப்போது காருக்கு முன்னால் 2 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அவர்களிடம் சென்று காரை நான் எடுத்துச்செல்ல வேண்டும் வழி விடுங்கள் என்று கேட்டார். அதற்கு அந்த இருவரும் காரை ரிவர்ஸ் எடுத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆவேசமடைந்த 2 இளைஞர்கள் வழக்கறிஞர் பாலமுருகனை கைகளால் சரமாரியாக தாக்கினர். 

இதில் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், அதனைத்தொடர்ந்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில் பல்லடம் போலீசார் பாலமுருகனிடம் அடிதடி தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சிவகங்கையை சேர்ந்த காளிதாஸ் மகன் நந்தகுமார் (21), சரவணன் மகன் அரவிந்தன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
Tags:    

Similar News