செய்திகள்
பிரதமர் மோடி

கடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு

Published On 2021-05-18 08:53 GMT   |   Update On 2021-05-18 08:53 GMT
கொரோனா தடுப்பூசி தொடர்பான அனைத்து கட்டுக்கதைகளுக்கும் எதிராக நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:

கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:

* கடினமான சூழலுக்கு இடையிலும் அதிகாரிகள் தங்கள் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகின்றனர்.

* கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றி வரும் நீங்கள் அனைவரும் இந்த போரின் களதளபதிகள்.

* கொரோனா 2வது அலையில் நாம் ஊரகப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

* நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான சவால்கள்  உள்ளன.

* கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிதான் ஆயுதம்.



* கொரோனா தடுப்பூசி தொடர்பான அனைத்து கட்டுக்கதைகளுக்கும் எதிராக நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும்.

* கொரோனா தடுப்பூசி விநியோகத்தை பெரிய அளவில் அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News