செய்திகள்
தற்கொலை

ஆரணி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை

Published On 2021-01-11 05:42 GMT   |   Update On 2021-01-11 05:42 GMT
ஆரணி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 57), கூலித்தொழிலாளி. கொரோனா பரவலால் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் போதைக்கு அடிமையான அவர் தினமும் மதுக்குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் 9-ந்தேதி மதுபானத்தில் விஷத்தை கலந்து குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பழனி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News