செய்திகள்
முக ஸ்டாலின்

அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது அமெரிக்கா வரை அம்பலம் - மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவு

Published On 2019-09-16 09:08 GMT   |   Update On 2019-09-16 09:08 GMT
தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்து இருக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் இன்று வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான சி.டி.எஸ். சென்னையில் புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்காக அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தி இருக்கிறது.

தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்து இருக்கிறது.

லஞ்சம் தந்தவர்களுக்கு அமெரிக்கா தண்டனை தந்திருக்கிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது எப்.ஐ.ஆர். கூட போடாமல் பாதுகாக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.

மத்திய அரசும், சி.பி.ஐ.யும் கண்டும் காணாமல் இதை ஊக்குவிக்கின்றனவா?

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Tags:    

Similar News