ஆன்மிகம்
ஆரல்வாய்மொழி மீனாட்சி

ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

Published On 2021-03-08 08:44 GMT   |   Update On 2021-03-08 08:44 GMT
ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவன்று இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 2 மணி மற்றும் 4 மணி ஆகிய 4 காலங்களில் சிறப்பு ருத்ரயாகம், மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.

அதேபோல 14-ந் தேதி காரடையான் நோன்பு (மாசி, பங்குனி விரதம்) விரதமானது மாலை 3 மணிக்கு நடக்கிறது.4 மணி அளவில் மீனாட்சி அம்மன் பாதத்தில் திருமாங்கல்ய கயிறு பூஜையும், சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பிரசாதம் மற்றும் திருமாங்கல்ய கயிறு, அர்ச்சனை குங்குமம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
Tags:    

Similar News