உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்

Published On 2022-01-12 09:50 GMT   |   Update On 2022-01-12 09:50 GMT
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுக் கூடங்கள் அனைத்தும் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வள்ளலார் நினைவு தினம், 26-ந்தேதி (புதன்கிழமை) குடியரசு தினம் என்பதால் மதுக்கடைகள் மூடி வைக்க வேண்டும்.

அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் அன்றைய தினங்களில் மதுகூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் அது கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமைகளை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  

மேலும் மது கூட உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News